திருவாரூர் அருகே பள்ளிக்கூட ஆண்டு விழாவில் மாணவிகளின் நடன நிகழ்ச்சியை செல்போனில் படம்பிடித்து கிண்டல் செய்த 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
திருவாரூர் மாவட்டம் வேப்பத்தாங்குடியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. மாணவிகளின் நடன நிகழ்ச்சியின் போது, வெளியூரை சேர்ந்த சிலர், செல்போனில் படம்பிடித்ததோடு, கிண்டல் செய்துள்ளனர்.
இதனை மாணவிகளின் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, ரஞ்சித், மாதவராஜ், செல்வம், ஷிவதாஸ் உள்ளிட்ட 4 பேரும் அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது.
காயமடைந்த சரவணன், முகேஷ், சிவக்குமார், மணிகண்டன், விக்னேஷ் ஆகிய 5 பேரும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ரஞ்சித் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -