கல்முனை எம்.ஐ.சம்சுதீன்-
கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 300 விதவை மற்றும் அநாதை குடும்பங்களிற்கு நேற்று உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
ஓபன் இன் நீட்ஸ் சர்வதேச தொண்டு நிருவனத்தின் அனுசரணையில் கல்முனை அல்மிஸ்பா பாடசாலை வளாகத்தில் வைத்து இப்பொருட்கள் விதவை மற்றும் அநாதை குடும்பங்களிற்கு கையளிக்கப்பட்டன.
இதன்போது தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 4500/= பெறுமதியான உலருணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
அல் ஈஸான் ஸ்ரீலங்கா அமைப்பின் பணிப்பாளர் நிஸ்தார் அனீஸ் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் கல்முனை முஸ்லிம் பிரிவு பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி, சட்டத்தரணி றோசான் அக்தார் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டு இப்பொருட்களை உரிய பயனாளிகளிடம் கையளித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -