எம்.ஜே.எம்.சஜீத்-
உள்நாட்டு அலுவலகள் அமைச்சின் நிதியுதவியுடன் பிரதேச செயலகங்களையும் அதன் பௌதிக வளங்களையும் அபிவிருத்தி செய்யும் முகமாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துஸித பீ வனிகசிங்க அவர்களின் வேண்டுகோளுக்கினங்க அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடம் 40 மில்லியன் பண உதவியுடன் எதிர்வரும் 2017.03.03 ம் திகதி பிற்பகல் 02.00 மணியலவில் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் திறந்துவைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உள்நாட்டு அலுவலகள் அமைச்சர் வஜிர அபேவர்தன, உள்நாட்டு அலுவலகள் அமைச்சின் செயலாளர் நீல் டி அல்விஸ், இப்பிரதேச மக்கள் பிரதிநதிகளும் கலந்து சிறப்பிக்கயுள்ளனர்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகமானது இப்பிரதேச மக்களின் தேவைகளை மிக இலகுவாக எந்தவித பிரச்சினையும் இல்லாமல் செய்து முடிக்கப்பட கூடியதாக இருக்;கும் எனவும் இந்நிகழ்வில் இப்பிரதேச பொது மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
