SLMC தனித்து மரச் சின்­னத்தில் போட்­டி­யி­டு­ம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் கிழக்கு மாகா­ணத்­திலும் சில பிர­தே­சங்­க­ளிலும் தனித்து மரச் சின்­னத்தில் போட்­டி­யி­டு­மென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் நீர்­வ­ழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்பு அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். 

கிழக்கு மாகா­ணத்தில் தனித்துப் போட்­டி­யி­டு­வதன் மூலம் பெரு வெற்றி வாய்ப்­பினைப் பெற்­றுக்­கொள்ளும் என்றும் கூறினார்.

கடந்த சனிக்­கி­ழமை மாலை பாத்­த­தும்­பறை தேர்தல் தொகு­தியைச் சேர்ந்த மீகம்­ம­னயில் குடிநீர் வழங்கும் திட்­ட­மொன்­றினை ஆரம்­பித்து வைத்து அங்கு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய பிர­தே­சங்­களில் பெரும்­பான்மைக் கட்­சி­யொன்­றுடன் கூட்டுச் சேர்ந்து போட்­டி­யிடும். அது ஐக்­கிய தேசியக் கட்­சி­யு­டனா அல்­லது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யு­டனா என்று இது­வரை தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை.

எந்தக் கட்­சி­யுடன் சேர்ந்து போட்­டி­யிட்டால் முஸ்லிம் காங்­கிரஸ் அதி­க­மான பிர­தி­நி­தி­களைப் பெற்­றுக்­கொள்ள முடியும் என்­பது தொடர்­பிலும் ஆரா­யப்­படும்.தற்­போது நல்­லாட்சி நிறு­வி­யி­ருக்கும் பெரும்­பான்மைக் கட்­சிகள் இரண்டும் சேர்ந்து பொதுச் சின்­னத்தில் போட்­டி­யிட்டால் கூடு­த­லான வெற்­றி­வாய்ப்­பினைப் பெறக்­கூ­டி­ய­தாக இருக்கும் எனவும் தெரி­வித்தார்.

இதே­வேளை எதிர்­வரும் உள்­ளூ­ராட்சித் தேர்தலை பிரச்சினைகளின்றி எதிர்கொள்வதற்காகவே கட்சியின் உட்பூசல்கள் தீர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விவெ.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -