முஸ்லீம்களின் ஒத்துழைப்பின்றி வட, கிழக்கு இணைப்பு சாத்தியமற்றது - சுமந்திரன் MP

பாறுக் ஷிஹான்-
டக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனத் தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், எனினும் உடனடியாக இரு மாகாணங்களையும் இணைப்பது நடைமுறைச் சாத்திமற்றது என குறிப்பிட்டுள்ளார்.



வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பாக முஸ்லிம் தரப்பினருடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் யுத்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான உணர்வுகள் அவர்களின் மனங்களில் காணப்படுகின்றன. அந்த உணர்வுகள் முஸ்லிம் மக்களிடமிருந்து களையப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் புதிய அரசியலமைப்பில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாகாணங்கள் இணைக்கப்படுவதற்கான பொறிமுறை முன்வைக்கப்படுவதன் மூலம் எதிர்காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -