குடும்பப் பெண் ஒருவர் வெட்டிக் கொலை

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியிலுள்ள பொற்பகுதி, குடத்தனை கிராமத்தில் வீட்டில் உறங்கி கொண்டிருந்தப் பெண் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

62 வயதான தங்கவேலாயுதம் கமலாதேவி என்ற பெண்ணே நேற்றிரவு 11 மணியளவில் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெண்ணின் கணவர் நோயாளி என்பதால் அவர் நேற்றிரவு தூக்கமாத்திரை உட்கொண்டு விட்டு நித்திரைக்கு சென்றதால் இரவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அறிந்திருக்கவில்லை.

பெண்ணின் கழுத்தில் கத்தியால் வெட்டியுள்ள நபர்கள் பெண் அணிந்திருந்த தங்க நகைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

பெண்ணின் சடலம் பருத்திதுறை அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், கொலை தொடர்பான விசாரனைகளை மோப்பநாய் உதவியுடன் முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். வீரகேசரி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -