பதிவு செய்யப்பாடாது அனைத்து பள்ளிவாயல்களையும் உடன் பதிவுசெய்யக -பாராளுமன்றில் அலிஸாஹிர்

08.12.2016ம் புத்த சாசன, கிறிஸ்தவ ,சுற்றுலாத்துறை, முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் சேவைகள் ,அமைச்சுக்களினது நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அலி ஸாஹிர் மௌலானா பள்ளிவாயல்கள் பதிவு செய்யப்படுவதில் ஏற்படும் காலதாமதம் தொடர்பில் சபையின் கவனத்திற்க கொண்டுவந்தார். 

கௌரவ முஸ்லிம் சமய கலாசார தபால் சேவைகள் அமைச்சர் அவர்களே! 

முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பள்ளிவாயல்களை பதிவு செய்யும் செயற்பாடுகள் மிகவும் தாமதமாக இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எமது பிரதேசத்தில் பதிவுசெய்யபடாதிருக்கும் அனைத்துப் பள்ளிவாயல்களையும் காலதாமதமின்றி உடன் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். 

பல பள்ளிவாயல் நிருவாகங்கள் சீரற்றுக்காணப்படுகின்றது. நிருவாகத்தினரால் வக்பு சொத்துக்கள் முறையீனமாக கையாளப்படுகின்றது, உரிய பதவிக்காலம் முடிவடைந்த பள்ளிவாயள்களின் புதிய நிருவாகத்தினை விரைவாக தெரிவு செய்வதற்கு திணைக்களம் நடவடிக்கை எடுப்பதுடன் பள்ளிவாயல்களின் நிருவாகரீதியான செயற்பாடுகள் மேற்பார்வைகளை வலுப்படுத்த வேண்டுமெனவும் கேட்டக்கொள்கின்றேன்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -