திருகோணமலை சிறைச்சாலையில் சிறைக்கைதியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை சிறைச்சாலையில் சிறைக்கைதியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்றிரவு (12) 7.25 மணியளவில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் தம்பலகாமம்.தெழுங்குநகர் பகுதியைச்சேர்ந்த கே.பரமேஸ்வரன் (30வயது) எனவும் தெரியவருகின்றது.

திருகோணமலை சிறைச்சாலையில் கைது தடுக்கப்பட்டுள்ள அறைக்குள் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் இவர் உளநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்ட்டுள்ளதுடன் சட்ட வைத்திய நிபுணரின் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -