நாவலடி சம்பூர் வீதி அங்குரார்ப்பணம் நிகழ்வு - சமந்தன் பங்கேற்பு

அப்துல்சலாம் யாசீம்,ஏ.எஸ்.எம்.தாணீஸ், எம்.என்.எம்.புஹாரி,-
திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 4.5 கிலோமீட்டர் தூரம் கொண்ட நாவலடி - சம்பூர் வரையிலான வீதி இன்று 13 செவ்வாய்கிழமை உத்தியோகபூர்வமாக இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் எதிர்க்கட்சித் தலைவரும்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது. புனர்வாழ்வு.மறுசீரமைப்பு.மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் 53.7 மில்லியன் செலவில் இலங்கை கடற்படைத்தளத்தினால் இவ்வீதி புணரமைப்பு செய்யப்பட்டது.

மூதூர் பிரதேச செயலாளர் வீ.யூசூப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாண்டோ,கிழக்கு மாகாண சபை அமைச்சர்களான சி.தண்டாயுதபாணி,ஆரியவதி கலப்பதி,துரைராஜசிங்கம் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. துரைரட்னசிங்கம்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.நாகேஷ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -