தனது மகன் கட்சிக்கு எதிராக இயங்கும்போது ஹஸன் அலிக்கு எவ்வாறு செயலாளர் பதவி வழங்குவது- உயபீடத்தில் வாக்குவாதம்

ஸன் அலி அவர்களின் மகன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக பெரும் புரளிகளைக் கிளப்பிக் கொண்டு திரிகிறார். அவரின் மகனே தலைமைக்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் போது செயலாளர் பதவி ஹஸன் அலிக்கு எவ்வாறு வழங்க முடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில் இன்று உயர்பீட உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியதாக இம்போட்மிரருக்கு உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹஸன் அலி தன்னுடைய மகன் கட்சிக்கு எதிராக செயல் படுகிறார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை கிழக்கு மாகாணத்தில் இருந்துதான் வரவேண்டும் என்று பெரும் புரட்சிகளைச் செய்து கொண்டுவருகிறார் அதனை தடுக்காமல் இருக்கும் நிலையில் செயலாளர் பதவியினை எவ்வாறு அவருக்கு  வழங்க முடியும்.

எனவே தேசியப்பட்டியல் என்பது கட்சியில் யாருக்கும் கொடுக்கலாம் ஆனால் செயலாளர் பதவி என்பது கட்சியின் ஒழுக்கக் கோவைக்கு கட்டுப்பட்டு கட்சிக்காகவே தங்களை அர்ப்பணித்த ஒருவருக்கே வழங்கப் படவேண்டும் அது கட்சியில் முக்கிய பதவிகளில் ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.

இவருடை கருத்துக்கு எதிர்த்துப் பேசும்போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கல்முனை ஜவாத் கீழே உள்ளவாறு குறிப்பிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -