தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் செட்டிகுளம் மகிழ்வகத்திற்கு அத்தியவசிய பொருட்கள் அன்பளிப்பு






மிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில், சுவிஸ் வாழ் அன்பரின் தாயாரின் நினைவு தினத்தை முன்னிட்டு ஒரு தொகுதி அன்பளிப்பு பொருட்களும், மதிய உணவும் இன்றையதினம்(27.11.2016) வவுனியா செட்டிகுளம் உள நல காப்பகமான "மகிழ்வகம்" நிலையத்தில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்டது.

இன்றையதினம் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அழைப்பின் பெயரில் வருகைதந்த அதிதிகளான வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர் திரு முத்தையா கண்ணதாசன், வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திரு சி.ரவீந்திரன் ஆகியோரினால் அன்பளிப்பு பொருட்கள் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி எஸ்.நர்மதா, மகிழ்வகம் தாதிய உத்தியோகத்தர் திருமதி ஜெ.சந்திரகலா ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

இன்றைய நிகழ்வுகளில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சுந்தரலிங்கம் காண்டீபன், வவுனியா பொது வைத்தியசாலையின் உள நல விடுதியின் தாதிய உத்தியோகத்தர் திரு சோ.சுதாகர், வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிஸ்கோ திட்ட இயக்குனர் திரு ரி.அமுதராஜ், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் கலாசார பிரிவின் இணைப்பாளர் திரு ரி.பிரகாஷ்கர், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஊடக இணைப்பாளர் திரு பி.கெர்சோன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயற்குழு உறுப்பினர் திரு ஜெ.கஜுரன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -