திருகோணமலை பகுதியில் விபத்து : இருவர் வைத்தியசாலையில் - சாரதி கைது

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை- கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குற்பட்ட வில்பனாக்குளம் பகுதியில் டிமோபட்டாவும் மோட்டார் சைக்கிளும் இன்று (04) காலை நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காயமடைந்தவர்கள் ரொட்டவெவ- அத்தாபெந்திவெவ பகுதியைச்சேர்ந்த முதலிஹாமிகே குணரத்ன (42 வயது) மற்றும்-கோமரங்கடவெல-மடுகஹவெவ பகுதியைச்சேர்ந்த சமன்த ராஜபக்ஷ (41வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கோமரங்கடவெல பகுதியிலிருந்து வேகமாக வந்த டிமோ பட்டா வளைவில் மோட்டார் சைக்கிளில் மோதியதாகவும் லொறியின் சாரதியான திருகோணமலை- அபேபுர -லெனின் மாவத்தையைச்சேர்ந்த மரக்கல மானகே ஜகத் குனசிறி (34வயது) கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் 

கைது செய்யப்பட்ட சாரதியை திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -