இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்..!

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்க்ஷி டயஸ் விக்ரமசிங்கவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  ஏற்றுக்கொண்டுள்ளார்.

கடந்த 17 ஆம் திகதி ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு விசாரணைகளுக்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதிகள் மூவரை நீதிமன்றத்திற்கு இழுத்துச் சென்றதை தான் மிகவும் அருவருப்புடனும், மோசமாகவும் கண்டிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்தே ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்க்ஷி டயஸ் தனது இராஜினாமாவை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -