முஸ்லிம்களை சந்தித்த மஹிந்த ராஜபக்ஷ - ஆட்சியை கைப்பற்ற முயற்சி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முஸ்லிம்கள் சிலருக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று நடைபெற்று வருகிறது.

குறித்த சந்திப்பு பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் காரியாலயத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த சந்திப்பில் குறிப்பிடத்தக்களவு முஸ்லிம் சமூகத்தினர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நல்லாட்சி அரசாங்கத்தின் மீது முஸ்லிம்கள் வைத்துள்ள நம்பிக்கையை தன் பக்கம் வென்றெடுக்கும் நோக்கில் இந்த சந்திப்பினை மஹிந்த தரப்பினர் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்தவின் ஆட்சியை வீழ்த்தி மைத்திரி, ரணில் தலைமையிலான ஆட்சியைக் கொண்டு வருவதற்கு முஸ்லிம் மக்களும், தமிழ் மக்களும் பிரதான பங்கினை வகித்தனர். மஹிந்தவின் ஆட்சியில் அரங்கேறிய இனவாதம் ஆட்சி மாற்றம் ஒன்றின் தேவையை சிறுபான்மைக்கு உணர்த்தியது.

முஸ்லிம்களின் மத அடையாளங்கள் திட்டமிட்டு கேவலப்படுத்தப்பட்டமை, வர்த்தகரீதியில் ஓரங்கட்டப்பட்டமை போன்ற விடையங்கள் மஹிந்த ஆட்சியின் ஆசீர்வாதத்துடன் நடத்தப்பட்டதாக கருத்துக்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவற்றின் பிரதிபலனாகவே ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் சிறுபான்மை மக்கள் தமது தீர்ப்பை கடந்த ஆட்சிக்கு எதிராக வழங்கினர்.

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், சிறுபான்மைக்கு எதிரான வன்முறைகள் மீண்டும் கட்டவிழ்க்கப்படக்கூடும் என்ற அச்சம் இன்னமும் அவர்களிடம் காணப்படுகின்ற நிலையில் இந்த சந்திப்பு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது .





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -