ஹிழ்றிய்யா மக்தப் பிரிவின் கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா..!

பழுலுல்லாஹ் பர்ஹான்-
ட்டக்களப்பு காத்தான்குடி-02 ஊர் வீதி ஹிழ்றிய்யா பள்ளிவாயலின் கீழ் இயங்கிவரும் ஹிழ்றிய்யா மக்தப் பிரிவின் முதலாம், இரண்டாம் வருட கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவ, மாணவிகளுக்கான நினைவுச் சின்னம், சான்றிதழ் வழங்கும் விழா 02-10-2016 நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிழ்றிய்யா பள்ளிவாயலில் இடம்பெற்றது.

ஹிழ்றிய்யா பள்ளிவாயல் பொருளாளரும், மட்டக்களப்பு மக்தப் மத்திய நிலைய உப செயலாளருமான ஏ.எல்.அப்துல் வஹாப் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவ, மாணவிகளுக்கான நினைவுச் சின்னம்,சான்றிதழ் வழங்கும் விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவரும், மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத்,காத்தான்குடி பெரிய மீரா ஜூம்மா பள்ளிவாயல் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் ,காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன், காத்தான்குடி மின்சார சபையின் மின் அத்தியட்சகர் ஏ.சீ.எம்.நௌபல் ஊர் பிரமுகர்கள், உலமாக்கள், கல்வியலாளர்கள், புத்திஜீவிகள், ஹிழ்றிய்யா பள்ளிவாயல் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது ஹிழ்றிய்யா மக்தப் பிரிவின் முதலாம், இரண்டாம் வருட கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவ, மாணவிகளுக்கான நினைவுச் சின்னம், சான்றிதழ்கள் என்பன மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால்; வழங்கி வைக்கப்பட்டது.

இதில் ஹிழ்றிய்யா மக்தப் பிரிவு முஅல்லிம்களான அல்ஹாபிழ் மௌலவி ஏ.எல்.எம்.நௌஸர் (ஹூமைதி), ஜனாபா றிஸ்வி முப்தி ஆகியோரும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு ஹிழ்றிய்யா மக்தப் பிரிவு மாணவ, மாணவிகளின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் பல்வேறு இஸ்லாமிய கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -