சண்டையின் போது மண்வெட்டியால் வெட்டிய இளம் பெண் - திருகோணமலையில் சம்பவம்

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை - தெவனிபியவர பகுதியில் இரண்டு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டையின் போது மண்வெட்டியால் வெட்டிய இளம் பெண்ணொருவருவரை இன்று (01) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மண் வெட்டியால் தாக்குதலுக்குள்ளானவர் மொறவெவ-தெவனிபியவர பகுதியைச்சேர்ந்த டி.எம்.எதிரிசிங்ஹ (48வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது இருவர் சண்டை செய்து கொண்டிருந்த போது பார்த்துக்கொண்டிருந்த பெண் மண் வெட்டியால் வெட்டியதில் படுகாயமடைந்த நிலையில் மஹதில்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மண்வெட்டியால் தாக்கிய அதே இடத்தைச்சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான ரம்யதாஷ பிவ்மன்தி (20 வயது) கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -