மௌலவி அப்துல் பாஷித் அவர்கள் நிந்தவூரை வந்தடைந்தார்.!

சுலைமான் றாபி-
ராபிதது அஹ்லிஸ்ஸுன்னாவின் ஏற்பாட்டில் தற்போது நிந்தவூரில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் விஷேட இஸ்லாமிய எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுவதற்காக சர்வதேச இஸ்லாமிய மார்க்க அழைப்பாளரும், தென்னிந்திய பிரபல மார்க்க அறிஞருமான மௌலவி அப்துல் பாஸித் புஹாரி அவர்கள் சற்றுமுன்னர் நிந்தவூரை வந்தடைந்தார்.

இந்த மாநாட்டில் பிரதம பேச்சாளராக மௌலவி அப்துல் பாஸித் புஹாரி அவர்கள் கலந்து கொள்ளவுள்ளதோடு, இதில் அஷ்ஷேய்க் என்.பி.எம். அபூபக்கர் ஸித்தீக் (மதனி), அஷ்ஷேய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில், அஷ்ஷேய்க் வைத்திய கலாநிதி எஸ்.எம். றைசுதீன் ஸராயீ, அஷ்ஷேய்க் எம். எல். முபாறக் (மதனி) ஆகியோர்கள்
கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

இதேவேளை இலங்கை வரும் அப்துல் பாஸித் புஹாரி அவர்கள் நாளை (25) மருதமுனையில் நடைபெறவுள்ள மார்க்க நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -