பன்னிரண்டு வயது சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்த முயன்ற நபர் விளக்கமறியலில்..!

எப்.முபாரக்-
திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பன்னிரண்டு வயதுடைய சிறுமியொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரை இம்மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.ஜி.விஸ்வானந்த பெர்ணாண்டோ நேற்று புதன்கிழமை (31) உத்தரவிட்டார். சீனக்குடா, தீவரக்கம்மானை பகுதியைச் 35 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேக நபர் மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்ற நிலையில் சிறுமியின் வீட்டில் யாருமில்லாத நிலையில் பன்னிரண்டு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு முயன்றதாக சிறுமியின் பெற்றோர்களினால் சீனக்குடா பொலிஸில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த சந்தேக நபரை செவ்வாய் கிழமை(30) கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சந்தேக நபரை பொலிஸார் நேற்று புதன்கிழமை (31) திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -