புனித துல்ஹஜ் மாதத்தை முன்னிட்டு மாபெரும் சன்மார்க்க சொற்பொழிவு..!

எம்.எம்.ஜபீர்-
புனித துல்ஹஜ் மாதத்தை முன்னிட்டு மாபெரும் சன்மார்க்க சொற்பொழிவு மத்தியமுகாம் சவளக்கடை மஜ்லிசுத் தஃவாவின் ஏற்பாட்டில் கல்முனை ஐக்கிய நலன்புரி பேரவையின் தஃவா பிரிவின் அனுசரனையில் நாளை வெள்ளிக்கிழமை (02) சவளக்கடை 5ஆம் கொளனி மஸ்ஜிதுல் சபூரியா ஜும்ஆப் பள்ளிவாசல் வளாகத்தில் அஸர் தொழுகையைத் தொடர்ந்து இரவு 9 மணி வரை மதீனா பல்கலைக்கழக மாணவன் அஷ்ஷெய்க் ஏ.டபிள்யூ றிஸ்கான் (ஹாமி) தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன்போது துல்-ஹஜ் ஆரம்ப பத்து நாட்களின் சிறப்பும் முக்கியத்துவமும் எனும் தலைப்பில் சவளக்கடை தாறுல் ஹிக்மா கலாபீடத்தின் அதிபர் அஷ்ஷெய்க தஸ்தீக் (மதனி), இப்றாகீம் (அலை) அவர்களின் தியாக வரலாறும் படிப்பினைகளும் எனும் தலைப்பில் அஷ்ஷெய்க இத்ரீஸ் ஹஸன் (ஸஹ்பி), பெருநாளும் ஹலாலான பொழுது போக்குகளும் எனும் தலைப்பில் மருதமுனை தாறுல் ஹூதா அறபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியின் முதல்வர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாரக் மதனி ஆகியோர்கள் மார்க்க சொற்பொழிவுகளை நிகழ்த்தவுள்ளனர்.

ஆண், பெண் இருபாலரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், விசேடமாக பெண்களுக்கு பிரத்தியேக இடம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவிக்கின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -