பைஷல் இஸ்மாயில், சப்னி அஹம்மட் -
புல்மோட்டை அறிசிமலை பகுதியில் கடந்த 13.08.2016 ம் திகதி புல்மோட்டை அறிசிமலை பெளத்த பிக்கு பனாமுற திலக்க வன்சவினால் கொழும்பில் இருந்து பேரூந்துகளின் மூலம் கொண்டுவரப்பட்ட ராவண பலய பெளத்த பிக்குகள் மற்றும் காடையர்களால் சேதமாகபட்ட இரு வீடுகளையும் உடனடியாக செய்து கொடுக்கவேண்டும் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் இன்றைய (25) கிழக்கு மாகாண சபை அமர்வின்போது உரையாற்றினார்.
கிழக்கு மாகாண சபையின் 62 வது அமர்வு இன்று (25) தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் இடம்பெற்றபோது தனது அவசரப் பிரரேணை சமர்ப்பித்து மேற்கண்டவாறு உரையாற்றினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
சகோதரர் காலித் என்பவரின் வீட்டினை மிக மோசமான முறையில் உடைக்கப்பட்டு முற்று முழுதாக சேதமாக்கப்பட்டுள்ள விடயத்தினை எற்றுக்கொள்ள முடியாது. இதற்கான நடவடிக்கையினை இரு நாட்களுக்குள் பொலிஸார் மேற்கொள்ள நடவடிக்கையினை எடுக்கவேண்டும். கடந்த 13 ஆம் திகதி இச்சம்பவம் இடபெற்றும் கூட இதுவரைக்கும் பொலிஸார் இதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவில்லை. அத்துடன் அந்த இரு வீடுகளிலும் இருந்து கொண்டுசெல்லப்பட்ட பொருட்களை உடனடியாக வழங்கி வைக்க அதற்கான துரித நடவடிக்கையினையும் பொலிஸார் எடுக்கவேண்டும் என்றார்.