ஜனாதிபதியின் இணையத்தளத்தை தாக்கிய ஹேக்கர்..!

னாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இணையத்தளத்தின் மீது ஸ்ரீலங்கன் யூத் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளவர்களினால் நேற்று மாலை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிங்கள தமிழ் புதுவருட காலத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையை நடத்துவது தொடர்பில் தாம் அதிருப்தியடைவதாக இந்தக்குழு தெரிவித்திருந்தது

இலங்கையின் இணையத்தளங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கோரியுள்ள இந்தக்குழு, இல்லையேல் இலங்கையில் இணையயுத்தம் ஏற்படலாம் என்றும் எச்சரித்திருந்தது.

உங்களுக்கு இவற்றை செய்யமுடியாது போனால் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அந்தக்குழு கோரியிருந்தது.

பிரதமரின் பொறுப்பற்ற செயல்கள் தடுக்கப்பட வேண்டும். பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றும் அந்த இணையத்தில் ஸ்ரீலங்கன் யூத் குழுவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் சில மணித்தியாங்களின் பின்னர் குறித்த இணையத்தளம் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -