ஹாசிப் யாஸீன்,அகமட் எஸ்.முகைதீன், எம்.எம்.ஜபீர்-
”என்ன சித்து விளையாட்டுக்களை விளையாடினாலும் முஸ்லிம் காங்கிரஸே சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையைபெற்றுக்கொடுக்கும்” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், நகர திட்டமிடல், நீர் வழங்கல்அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய ரீதியாக முன்னெடுத்துவரும் 'வீட்டுக்கு வீடு மரம்' செயற்திட்ட நிகழ்வு ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வருமான ஏ.எல்.ஏ.மஜீத்தலைமையில் சனிக்கிழமை (13) சாய்ந்தமருதில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டுஉரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம்,ஆரிப் சம்சுதீன், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி,சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம்.ஹனீபா, செயலாளர் ஏ.மஜீத்,சாய்ந்தமருது ஜம்மிய்யதுல் உலமா சபைத் தலைவர் யூ.எல்.எம்.காசீம் உள்ளிட்ட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள்,போராளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
மிக விமர்சையாக மக்கள் பங்களிப்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து அமைச்சர் அங்கு உரையாற்றுகையில்,
சாய்ந்தமருத்துக்கான உள்ளுராட்சி சபை நாட்டினுடைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொடுத்த வாக்குறுதி, முஸ்லிம்காங்கிரசின் ஊடாக பெறப்பட்ட வாக்குறுதி அதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசே பெற்றுத்தரும் வேறு கட்சிகள் மற்றும்அமைப்புக்கள் விசமத்தனமாக பூந்து விளையாடுவதுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இடம் கொடுக்காது.
சாய்ந்தமருது மக்களின் அதிகப்படியான ஆணையைப் பெற்ற கட்சி என்ற அடிப்படையில் மக்களின் நியாயமானகோரிக்கைகளை பெற்றுக்கொடுப்பதற்கு நாங்கள் தயாராகவுள்ளோம். இதனை வைத்து சிலர் அரசியல் குளிர் காய்வதற்காகவலிந்து கொண்டு திரிகின்றனர்.
சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்றத்தினை பெற்றுக்கொடுப்பதில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் கல்முனை பிரதேசஅரசியல் தலைமைகளும் இதயசுத்தியுடன் செயற்படவில்லை என்றும் சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தைஏமாற்றுகிறார்கள் என்றும் மக்கள் மத்தியில் ஒரு புரளியை கிளப்பி விட்டிருந்தனர்.
இருந்தபோதிலும் அவர்களும் உள்ளுராட்சி மாகாண சபைகள்; அமைச்சரை அண்மையில் சந்தித்தனர். என்ன நடந்ததுஅமைச்சர் கூறியதை கேட்டு வந்து பொட்டிப் பாம்பாக அடங்கியுள்ளனர். இதுதான் இவர்களின் வங்குரோத்து அரசியலாகும்.இதனை முஸ்லிம் காங்கிஸ் ஒரு போதும் செய்யாது.
இவர்கள் உள்ளுராட்;சி அமைச்சருக்கு என்னதான் அரசியல் நெருக்கடியை கொடுத்து அவரை குழப்ப முயற்சி எடுத்தாலும்அதனை முஸ்லிம் காங்கிரசின் ஊடாகவே பெற்றுத் தரப்பப்டும். உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் இதனைவழங்குவதற்கு தயாராக உள்ளார் எனவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.