யாழ் தெல்லிப்பழையில் திறக்கப்பட்ட மாபெரும் அலுமினியத் தொழிற்சாலை

சப்னி அஹமட்,றிஸ்லி சம்ஷாட்-
ந்தியாவின் பிரபல தொழிலதிபர் தி.தில்லைராஜ் அவர்களின் முயற்சியால் திறக்கப்பட்ட மாபெரும் அலுமினியத் தொழிற்சாலை நேற்று யாழ் தெல்லிப்பழையில் வடமாகாண ஆளுணர் ரெஜினேட் குரேயினால் கோலாகலமான முறையில் திறந்து வைக்கப்பட்டது.

தற்காலிகமாக நூற்றுக்கு மேற்பட்ட இளைஞ்சர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்கும் பொருட்டு 150 மில்லியன் செலவில் ஆரம்பிக்கப்பட்ட அலுமினியத் தொழிற்சாலையின் உற்பத்திப் பொருட்கள் இலங்கை மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

கடந்த கால யுத்தம் காரணமாக சகலதும் இழந்து இன்று தங்களின் இடங்களுக்கு குடியேறி வரும் மக்களுக்கு தொழில் வழங்கும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சாலை இன்னும் பல கிளைகளும் ஆரம்பிக்கப் பட்டு நடைபெற உள்ளதாகவும் அதன் நிறுவனர் தில்லைராஜ் குறிப்பிட்டார்.

இந் நிறுவனத்தின் திறப்பு விழாவுக்கு பிரதம விருந்தினராக வடமாகாண சபை ஆளுணர் ரெஜினேட் குரே, கெளரவ விருந்தினராக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.















எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -