மகத்தான மனிதர்களான ஆசான்களை ஆத்மார்த்தமாய் பாராட்டி கெளரவிக்கும் நினைவுப் பெருவிழா..!

எம்.ஐ,எம்.அஸ்ஹர்-
சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலயத்தின் "அல் ஜலால் ஆலம் விழுதுகள்" எனும் தலைப்பில் 1988-1993 ஆண்டுவரை இப் பாடசாலையில் அகரம் சொல்லித் தந்து வாழ்வை செப்பனிட்ட மகத்தான மனிதர்களான ஆசான்களைஆத்மார்த்தமாய் பாராட்டி கெளரவிக்கும் நினைவு பெருவிழா பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.( 28)

அதிபர் எம்.எஸ். நபார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாகவும், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ரமிஸ் அபுபக்கர் கெளரவ அதிதியாகவும், சிரேஷ்ட ஆசிரியர் எம்.எம்.ஷரிப் மற்றும் தொழிலதிபர் எம்.எச்.நாசர் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இப்பாடசாலையின் பழைய மாணவர்களின் பங்களிப்புடன் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் ஆலம் விழுது நினைவுமலர் வெளியிடப்பட்டு, கற்பித்த ஆசான்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னமும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -