வடக்கு கிழக்கை இணைக்கக் கூடாது - திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹ்ரூப்

எப்.முபாரக்-
டக்கும் கிழக்கும் ஒரு போதும் இணையக்கூடாது. அவ்வாறு இணையுமானால் கிழக்கு மாகாண முஸ்லிம், தமிழ் மக்கள் மாத்திரமன்றி சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூப் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்காக கிண்ணியா மஜ்லிஸ் அஸ் சூராவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துறையாடல், புதன்கிழமை (17) கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,'புதியதாக உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி வட்டார முறை திருமலை மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு மாத்திரம் அன்றி தமிழ் மக்களுக்கும் பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த உள்ளூராட்சி சபைகளுக்கான பிரநிதிகள் ஒதுக்கீட்டில் சிங்களச் சமூகத்தினுடைய பிரதிநிதிகளை நாங்கள் குறைக்கக் கோரவில்லை. மாறாக தமிழ், முஸ்லிம்களின் இன விகிதாசரத்துக் கேற்ப பிரதிநிதிகள் வழங்கப்பட வேண்டும்.

1963 ஆம் ஆண்டு வட்டார முறைக்குச் செல்லுவதென்றால், புதிய எல்லை நிர்ணயங்களையும் புதிய சபைகளையும் உருவாக்கிவிட்டுத்தான் அதற்குச் செல்ல வேண்டும்.தோப்பூரை ஒரு பிரதேச சபையாகவும் கட்டைபறிச்சான், சம்பூர், மல்லிகைத் தீவு ஆகிய பிரதேசங்களை இணைத்து ஒரு தமிழ் பிரதேச சபையாகவும் தமிழ், முஸ்லிம்கள் கலந்த ஒரு நகர சபையாக மூதூரையும் உருவாக்க வேண்டும். இவ்வாறு அங்கு மூன்று புதிய சபைகள் உருவாகுகின்றபோது தமிழ், முஸ்லிம் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை இன விகிதாசாரத்துக்கு ஏற்ப பெற்றுக்கொள்ள முடியும்.

இதே போன்று கிண்ணியாவிலும் கிண்ணியா நகரசபை என்றும் கச்சக்கொடித்தீவு பிரதேசசபை என்றும் குறிஞ்சாக்கேணி பிரதேசசபை என்றும் மூன்று உள்ளுராட்சி சபைகள் உருவாக்கப்படவேண்டும்.இதில் கிண்ணியா பிரதேசசபையும் கச்சக்கொடித்தீவு பிரதேசசபையும் இணைத்து குறிஞ்சாக்கேணி என்ற பெயரில் புதிய பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டும். அதேபோல் புல்மோட்டை மற்றும் தோப்பூருக்கு தனியான பிரதேச செயலகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்' என்றார்.

'வடக்கும் கிழக்கும் ஒருபோதும் இணையக்கூடாது. இது சம்மந்தாக பொதுமக்களுக்கு போதியளவு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு சிவில் சமூகம், அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்' என்ற தீர்மானம் திருகோணமலை மாவட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் சபையில் ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. திருகோணமலை மாவட்ட சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல் புதன்கிழமை (17) கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை கேட்போர்கூடத்தில் நடைபெற்ற போதே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்ட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -