பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்கவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழா மாநாட்டுக்கு முன்னர், கட்சியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவெளை அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக கடும் ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
எவ்வாறாயினும் பிரசன்ன ரணதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என சுதந்திரக் கட்சி தகவல்களும் தெரிவிக்கின்றன.