சுதந்திரக் கட்சியில் இருந்து பிரசன்ன ரணதுங்க நீக்கம்...?

பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்கவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழா மாநாட்டுக்கு முன்னர், கட்சியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவெளை அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக கடும் ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

எவ்வாறாயினும் பிரசன்ன ரணதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என சுதந்திரக் கட்சி தகவல்களும் தெரிவிக்கின்றன.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -