முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் ஆடையை தங்கள் விருப்பத்திற்குரிய உத்தியோகபூர்வ சீருடையாக ஸ்கொட்லாந்து பொலிஸ் ஏற்றுக் கொண்டுள்ளது. முஸ்லிம் பெண்கள் போலிஸ் தொழிலில் இணைவதை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேல் அதிகாரிகளின் அங்கீகாரத்தைப் பெற்று முஸ்லிம் பெண் பொலிஸார் ஹிஜாப் அணிந்து கடமையில் ஈடுபட அனுமதி அளித்திருந்த ஸ்கொட்லாந்து பொலிஸார் தற்போது, அதனை விருப்பத்திற்குரிய உத்தியோகபூர்வ சீருடையாக ஏற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது. அதேவேளை, லண்டன் பொலிஸார் பத்து வருடங்களுக்கு முன்னரே ஹிஜாபை உத்தியோகப் பூர்வ சீருடையாக ஏற்றுள்ளமை சுட்டிக் காட்டத்தக்கதாகும்.