வீட்டுக்கு மோட்டர் சைக்கிளில் சென்ற சாஜன் மேஜர் விபத்தில் பலி..!

க.கிஷாந்தன்-
லங்கை இராணுவ படையில் தொழில் புரியும் ஒருவர் நுவரெலியா இராணுவ முகாமில் தனது பணியை முடித்துவிட்டு வெலிமடை பிரதேசத்தில் உள்ள தனது வீட்டுக்கு மோட்டர் சைக்கிளில் செல்லும் போது வெலிமடை கெப்பட்டிபொல பிரதேசத்தில் வைத்து பிரதான வீதியை விட்டு விலகி வீதியில் ஓரத்தில் உள்ள 4 அடி கொண்ட கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் 20.08.2016 அன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயரிழந்தவர் வெலிமடை குருத்தலாவ பகுதியை சேர்ந்த சாஜன் மேஜர் பாலித்த குமார வயது 39 இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் வெலிமடை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -