ஸ்ரீ.சு.கட்சியின் வன்னி மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்களின் அமைப்பாளராக மஸ்தான் எம்.பி நியமனம்..!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்களின் அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து வழங்கப்பட்டது 

வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியானது வவுனியா,மன்னார்,முல்லைத்தீவு, ஆகிய மூன்று மாவட்டங்களை ஒன்றிணைத்து காணப்படுவதால் தமிழ் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி மஸ்தான் எம்பியும், சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி மாகாண சபை உறுப்பினர் தர்மபாலாவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இறுதியாக இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஒரேயொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -