மு.கா ஸ்தாபக தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் அட்டாளைச்சேனையில் இடம் பெற்ற வைபவமொன்றில் அடுத்த ஜனாதிபதியாக ர.பிரமதாசா வருவதை என் சார்பாகவும் கட்சி சார்பாகவும் விரும்புகிறேன் என்று கூறிய விடயம் அன்றைய கட்சியின் தவிசாளரினால் அது அவரின் தனிப்பட்ட கூற்று கட்சி சார்பான கூற்றல்ல என்று கூறப்பட்டதாலே சேகு இஸ்ஸதீன் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
இன்று முக்கியமான இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் கட்சியினுடைய தலைவர் இணைந்த வடகிழக்கு தொடர்பான விடயத்தில் சம்பந்தன் ஐயாவோடு கை கோர்த்த நிலையும் வடகிழக்கு இணைப்பு தொடர்பாக கட்சியின் கிழக்கு மாகாண பிரமுகர்கள் வேறு விதமான நிலைப்பாட்டிலும் இருப்பதையும் அவர்களது அறிக்கைகள் ஊடாக அறிய முடிகிறது. கட்சியின் சிரேஷ்ட பிரதித்தலைவர் ஒருவர் வடகிழக்கு இணையக் கூடாது என்பதை அண்மையில் வலியுறுத்தினார். அதே போல் கட்சியின் பிரதித்தலைவர் பிரதி அமைச்சர் ஒருவர் அவ்வாறான நிலைப்பாட்டை வெளியிட்டிருந்தார். அதே போல் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் சம்பந்தன் ஐயா ஹக்கீம் உரையாடலுக்கு அப்பால் இது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுகின்ற விடயம் இது தொடர்பில் ஐ.தே.க என்ன நிலைப்பாட்டை எடுத்தாலும் ஐ.ம.சு.கூட்டமைப்பு ஒரு போதும் இணைப்புக்கு அங்கீகரிக்க போவதில்லை என்றார். அதே போல் வடமாகாண பிரதிநிதி ஒருவர் இணைக்கப்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டை எடுத்திருந்தார்.
எனவே முஸ்லீம்களின் தீர்வு விடயத்தில் மு.கா ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியாத நிலைப்பாட்டை உணரக் கூடியதாகவே உள்ளது. எனவே உடனடியாக தங்களது நிலைப்பாட்டை கட்சியின் நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் முன் வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்ற மு.கா இது தொடர்பான தெளிவுவான முன் மொழிவுகளை கட்சி சார்பாக முன் வைக்க வேண்டிய கடப்பாட்டில் இருக்கிறார்கள்.
ஏற்கனவே தேசிய காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை வடக்கு கிழக்கு பிரந்திருக்க வேண்டியது அவசியம், அதனூடாகத்தான் முஸ்லீம்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்கின்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்திருந்தது.
எனவே இவ்வாறன முக்கியமான தருணங்களில் எடுக்க வேண்டிய முடிவு தொடர்பில் மறைந்த தலைவரின் ஒரு வார்த்தையை கோடிடலாம் என நினைக்கிறேன். சரியான சர்ந்தப்பத்தில் எடுக்கப்படுகின்ற பிழையான முடிவுகள் பிழையானவை அதே போல் பிழையான சந்தர்பத்தில் எடுக்கப்படுகின்ற சரியான முடிவுகளும் பிழையானவை சரியான சந்தர்ப்பத்தில் எடுகப்படுகின்ற சரியான முடிவுகள் மாத்திரமே சரியானவை.
எனவே மு. கா தனது கட்சியின் இனப்பிரச்சினைக்கு தீர்வு விடயத்தில் வடகிழக்கு பிராந்தியங்கள் தொடர்பில் தமது கட்சி சார்பான நிலைப்பாட்டை வெளியிட வேண்டும்.