சம்மாந்துறையில் யானை தாக்கி முஹம்மட் பர்ஹான் பலி..!

யு.எல்.எம். றியாஸ்-
ம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்படட தீவு வடடை பிரதேசத்தில் யானைத்தாக்குதலினால் விவசாயி ஒருவர் மரணமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மாவடிப்பள்ளி கிராமத்திற்கு அருகேயுள்ள தீவு வடடை வயல்பிரதேசத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த வேளாண்மையை யானையின் அழிவில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு நேற்று இரவு காவலில் ஈடுபட்டிருந்த 32 வயதுடைய கலந்தார் லெப்பை முஹம்மட் பர்ஹான் என்பவரே யானைத்தாக்குதலுக்கு இலக்காகி மரணமானவராவார்.

சம்மாந்துறையை பிறப்பிடமாக கொண்ட இவர் மாவடிப்பள்ளி கிராமத்தில் திருமணம் முடித்து இவருக்கு மூன்று பிள்ளைகளும் உள்ளனர். அதில் இரு பெண் பிள்ளைகளும் ஒரு ஆணும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை நீதிவான் நீதி மன்ற நீதிபதி எச்.எம்.முஹம்மட் பஸீல் சடலத்தை நேரில் பார்வையிடடதுடன் மேலதிக விசாரணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது .




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -