யு.எல்.எம். றியாஸ்-
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்படட தீவு வடடை பிரதேசத்தில் யானைத்தாக்குதலினால் விவசாயி ஒருவர் மரணமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மாவடிப்பள்ளி கிராமத்திற்கு அருகேயுள்ள தீவு வடடை வயல்பிரதேசத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த வேளாண்மையை யானையின் அழிவில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு நேற்று இரவு காவலில் ஈடுபட்டிருந்த 32 வயதுடைய கலந்தார் லெப்பை முஹம்மட் பர்ஹான் என்பவரே யானைத்தாக்குதலுக்கு இலக்காகி மரணமானவராவார்.
சம்மாந்துறையை பிறப்பிடமாக கொண்ட இவர் மாவடிப்பள்ளி கிராமத்தில் திருமணம் முடித்து இவருக்கு மூன்று பிள்ளைகளும் உள்ளனர். அதில் இரு பெண் பிள்ளைகளும் ஒரு ஆணும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை நீதிவான் நீதி மன்ற நீதிபதி எச்.எம்.முஹம்மட் பஸீல் சடலத்தை நேரில் பார்வையிடடதுடன் மேலதிக விசாரணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது .