சுற்றுலாத்துறை பணியாளர்களுக்கு ஆணுறை வழங்க நடவடிக்கை - சுகாதார அமைச்சர்

லங்கை சுற்றுலாத்துறையில் பணியாற்றுபவர்கள் எச்.ஐ.வி தொற்றுக்கு இலக்காகி வருவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்கு ஆணுறைகளை விநியோகிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று புத்திக்கபத்திரனவினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையில் பணியாற்றுவோரில் 20 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு இலக்காகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்களுக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுற்றுலாத்துறையில் வழிகாட்டிகளாக பணியாற்றுவோரே அதிகமாக இந்தத் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். அதற்கமைய அவர்களுக்கு ஆணுறைகளை விநியோகிக்க நடவடிக்கையெடுத்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -