ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
தோப்பூர் செல்வநகர் கிராமிய தனியான குடிநீர் வழங்கல் இணைப்பு திட்டத்தினை நேற்று திங்கட்கிழமை (01) இரவு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கள் அமைச்சருமான றவூப் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீகின் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமாப்புச் சபையின் மூதூர் நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் இணைத்தலும் அதனை பொறுப்பேற்கும் நிகழ்வின் மூலம் தோப்பூர் செல்வநகர் பிரதேச மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கான தீர்வு எட்டப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர், ஆர்.எம்.அன்வர், மூதூர் பிரதேச சபையின் செயலாளர் ஜமால்தீன் நஜாத்,சேருவில பிரதேச சபை முன்னால் உறுப்பினர் எம்.எல்.பைசர் ஹாஜி உட்பட நீர்வழங்கல் சபையின் அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.