தனக்கும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீருக்குமிடையில் எந்தப் பிரச்சனையும் இல்லை -தயாகமகே -வீடியோ

ஓட்டமவடி அஹமட் இர்ஷாட்-

வித பிரச்சனையும் இல்லை. அமைச்சர் தயா கமகே.
வீடியோ பிரச்சனை சம்ப்ந்தமாக தயா கமகேயின் கருத்து:-
கடந்த 27ம் திகதி ஹிங்குரான சந்தை கட்டிட தொகுதியினை அமைச்சர் தயா கமகே மற்றும் அவருடைய பாரியாரரும் பிரதி அமைச்சருமான அனோமா கமகே ஆகியோர்களால் திறந்து வைக்கப்பட்டதற்கு பிற்பாடு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் மீண்டும் திறந்து வைக்கப்பட்ட
சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் பரவாலாக பேசப்பட்டு வந்த விடயம் சம்பந்தமாக நேரடியாக அமைச்சர் தயாகமகே அவர்களை சந்தித்து வினவிய பொழுது தனக்கும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டிற்கும் இடையில் எதுவித பிரச்சனைகள் அரசியல் ரீதியாகவோ தனிப்பட்ட வகையிலோ கிடையாது என்றும் குறித்த விடயத்தினை ஊடகங்களே பூதாகரமாக்கி தனக்கும் முதலமைச்சர் ஹாபிஸிற்கும் பிரச்சனைகள் இருப்பது போன்று வெளிக்காட்டியதாக தெரிவித்தார் அமைச்சர் தயாகமகே.

மேலும் தனது கருத்தினை தெரிவித்த தயா கமகே.. நான் மாகாண சபையில் எதிர் கட்சி தலைவராக இருக்கின்ற காலப்பகுதியிலேயே குறித்த ஹிங்குரான பொதுமக்கள் சந்தைகட்டிடத்திற்கான முன்னெடுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அந்த கட்டிட தொகுதியினை கொண்டு வருவதற்கு எனது பெரும் பங்களிப்பு இருந்தது என்பது உண்மையான விடயமகும்.

பொதுவாக நாங்கள் அழைப்பு விடுக்கப்படாத எந்த நிகழ்வுகளுக்கும் சமூகமளிப்பதில்லை. அந்த கட்டிட தொகுடியினை திறப்பதற்காக எனக்கோ அல்லது எனது மனைவி அனோமா கமகேக்கோ அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை. இருந்தும் ஹிங்குரான பகுதியில் வாழுகின்ற ஒட்டு மொத்த பொதுமக்களால் எங்களை குறித நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை காரணமாக நாங்கள் அந்த
நிகழ்வில் அவர்களின் அழைப்பினை மதிக்கும் முகமாக கலந்து
கொள்ளுவதற்காக சென்றிருந்தோம்.

குறித்த நிகழ்வானது காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்களின் அழைப்பைனை கெளரவப்படுத்து முகமாக நாங்கள் காலை 10.15 மணிக்கு அங்கு சென்றிருந்தோம். ஆனால் நாங்கள் 10.15மணிக்கு அங்கு சென்றிருந்த வேலையில் முதலமைச்சர் ஹாபிஸ் சமூகமளித்திருக்கவில்லை. அதனால் அங்கிருந்த பொதுமக்கள்
எங்களை சம்பிரதாய பூர்வமாக வெற்றிலை தந்து வரவேற்று மத
அனுஸ்டானங்களோடு எங்களை ஆரம்பித்து வைக்குமாறு வேண்டி
கொண்டனர். ஆகவே எனக்கு வாக்களித்து என்னை கெளரவப்படுத்துகின்ற மக்களை நான் மதிக்கும் முகமாக அவர்களுடைய வேண்டு கோளினைஏற்றுக்கொண்டேன். இவைதான் அங்கு இடம் பெற்ற உண்மை சம்பவமாகும்.

எனக்கும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமடிற்கும் இடையில் தனிப்பட்ட ரீதியிலோ அல்லது அரசியல் ரீதியாக எந்த பிரச்சனைகளும் கிடையாது.

இந்த விடயத்தினை ஊடகங்கள் பெரிது படுத்துவதற்கு எந்த தேவைப்பாடும் இல்லை என்பதே எனது கருத்தாகும் என கூறி முடித்தார் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய புள்ளியும் அமைச்சருமான தயா கமகே.
தயா கமமே குறித்த ஹிங்குரான சந்தை கட்டிட தொகுதி திறப்பு விழா விடயம் சம்பந்தமாக தெரிவித்த கருத்துக்களின் காணொளி எமது இணைய வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -