முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி சந்தேகநபர்களை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பில், சாட்சிகளை மறைக்க முற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, இவர்கள் கைதுசெய்யப்பட்டு, தொடர்ந்தும் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, எதிர்வரும் 15ம் திகதி இடம்பெறவுள்ள தனது மகளின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு, அனுர சேனாநாயக்க, சட்டத்தரணி மூலம் இன்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கை நீதவானால் நிராகரிக்கப்பட்டுள்ளது.