கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு முன்னால் இன்று இரவு ஏற்பட்ட விபத்தில் பிரபல ஆங்கில ஆசிரியர் ஹம்ஷா (65) வயது ஸ்தலத்தில் மரணமானார். மற்றொருவர் கிண்ணியா வைத்தியசாலை தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இஷாத் தொழுகை முடித்து தனது துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிய ஓய்வு பெற்ற பிரபல ஆங்கில ஆசிரியர் ஹம்சா (வயது65) மோட்டார் வண்டி விபத்தில் மரணமானார்.
இவர் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் ஆங்கில மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார் அந்நாரின் ஜனாஷா திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக எமது இம்போட்மிரர் செய்தியாளர் குறிப்பிட்டார்.
மேலதிக விசாரணை கிண்ணியா பொலிசாரினால் தொடர்கிறது..