வைத்தியத்துறையில் இருந்தவாறே சட்டத்துறையில் தேர்ச்சி பெற்ற வை.எல்.யூசூப்..!

எம்.வை.அமீர்-
டந்த 1998 ஆம் ஆண்டு முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலை, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை போன்றவற்றில் கடமையாற்றி தற்போது கொழும்பு லேடி றிஜ்வே வைத்தியசாலையில் சிரேஸ்ட வைத்திய அதிகாரியாக கடமை புரிந்துகொண்டிருக்கும் வைத்தியர் வை.எல்.யூசூப், இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டத்துறை கல்வி இறுதி ஆண்டு பரிட்சையில் 4 படங்களிலும் B சித்தி எனும் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுள்ளார். 

இலங்கை தமிழ் பேசும் மக்களில் மேலைத்தேய வைத்தியர் ஒருவர் சட்டத்துறை பட்டதாரியாகவும் ஆகியிருப்பது இதுவே முதல் தடவை. இவர் முகாமைத்துவ துறையிலும் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர் கல்முனை ஸாகிரா கல்லூரியில் உயர் தரத்தை முடித்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டம் பெற்றவர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -