அய்யோ..! நான் அதற்குப் போக மாட்டேன் - பசில்

அய்யோ..! நான் அதற்குப் போக மாட்டேன் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று (30) பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக இடம்பெற்ற பொது நிதி மோசடி வழக்கில் கலந்துகொள்ள வருகை தந்த போதே ஊடகங்களிடம் அவர் இதனைக் கூறினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது மாநாட்டில் கலந்துகொள்வீர்களா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் நிச்சயமாக புதிய சின்னத்தில், புதிய கூட்டணியில் போட்டியிடுவோம். தொகுதி அமைப்பாளர்களை நீக்குவது நாம் அல்ல. அது அந்தக் குழுவின் செயற்பாடு எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -