நாளை புலமைப்பரிசில் பரீட்சை 9.30க்கு ஆரம்பம்..!

நாளை 21ஆம் திகதி, ஞாயிற்றுக்கிமையன்று நடைபெறவிருக்கின்ற 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கின்ற பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விசேட ஆலோசனைகளை வழங்கியுள்ளன.

 இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.என்.ஜே. புஷ்பகுமார விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

புலமை பரிசில் பரீட்சைக்கான முதலாவது வினாத்தாளுக்கான பரீட்சை காலை 9.30 இலிருந்து 10.15 வரைக்குமான 45 நிமிடங்களை கொண்டிருக்கும். இரண்டாம் வினாத்தாள் முற்பகல் 10.45 மணிமுதல் நண்பகல் 12 மணி வரைக்குமான 1 மணிநேரம் 15 நிமிடங்களை கொண்டிருக்கும். 

ஆகவே, பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபகங்களுக்கு காலை 9 மணிக்கு முன்னரே சமூகமளிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -