கிழக்கில் 64 இராணுவ முகாம்களை அகற்ற அரசாங்கம் தீர்மானம்..!

கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 64 இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2016 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் கிழக்கு மாகாணத்தில் 162 முகாம்கள் காணப்பட்டன. இதனை ஆகஸ்ட் 31 ஆகும் போது 98 ஆக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, திருகோணமலை மாவட்டத்தில் 64 இராணுவ முகாம்கள் நிறுவப்பட்டிருந்தன. இதன் எண்ணிக்கை 33 ஆக குறைக்கப்படவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 69 இராணுவ முகாம்கள் அமையப் பெற்றுள்ளன. இதனை 40 ஆக குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் 31 இராணுவ முகாம்கள் காணப்பட்டன. இதனை 21 ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு இதுவரை நீக்கப்பட்டுள்ள முகாம்களின் மொத்த எண்ணிக்கை 30 ஆகும். இன்னும் 24 முகாம்கள் அகற்றப்படவுள்ளன. இராணுவ வீரர்கள் 100 இற்குக் குறைவாகவுள்ள முகாம்களே இவ்வாறு அகற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இது குறித்து பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி கருத்துத் தெரிவிக்கையில், குறிப்பிட்ட இராணுவ முகாம்கள் அமையப் பெற்றுள்ளவர்களுக்கு சொந்தமான காணிகளை வழங்குவதற்காக இந்த முகாம்கள் அகற்றப்படுகின்றன. பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் முகாம்கள் அகற்றப்பட்டு காணிகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -