ஆனமடுவையில் இருந்து பங்கதெனிய நோக்கி பயணித்த கெப் ரக வாகனமொன்றும் எதிரில் வந்த மோட்டார் சைக்களும் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து நேற்று இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் சிறுமியின் தந்தை,தாய் மற்றும் ஒரு வயது நிரம்பிய சகோதரியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தெவ்மி ராஜகருணா என்ற 5 வயதுடைய சிறுமியே உயிரிழந்துள்ளார்.
மேலும், காயமடைந்தவர்கள் ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த சிறுமியின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ள நிலையில், விபத்து தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கெப் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.வி.கே