அம்பாறை மாவட்டத்திலுள்ள இருநூறு முன்பள்ளி ஆசிரியர்களுக்கானடிப்ளோமாப்பயிற்சிநெறிக்கான அங்குரார்ப்பண பைவவம் இன்று 20ஆம் திகதி
சனிக்கிழமை காலை 9மணிக்கு கல்முனை நால்வர்கோட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கல்முனை றோட்டரிக்கழகத் தலைவர் றோட்டரியன் எஸ்.சசிகுமார் தலைமையில்நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குமாகாண கல்வியமைச்சர் சிங்காரவேலு தண்டாயுதபாணி கலந்துசிறப்பிக்கவுள்ளார்.
மட்டக்களப்பு கல்முனை றோட்டரிக்கழகங்கள் இணைந்து நடாத்தும் இவ்டிப்ளோமாபயிற்சிநெறி அங்குரார்ப் பண நிகழ்வில் கௌரவ அதிதிகளாக றோட்டரிக்கழக முன்னாள் ஆளுநர் றோட்டரியன் தர்சன் ஜோன் மற்றும் அம்பாறை மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்வார்கள்.
சிறப்பு அதிதிகளாக ஆறுதல் நிறுவன பணிப்பாளர்நாயகம் சுந்தரம்டிவகலாலாகிழக்குமாகாண முன்பள்ளி அமையப்பணிப்பாளர் பொன்.செல்வநாயகம்
தென்கிழக்குப்பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி எஸ்.குணபாலன்முன்பள்ளிஅமைய அம்பாறை இணைப்பாளர் சுபைர் ஆகியோர் கலந்துகொள்வார்கள்.
ஒருவருட டிப்ளோமா கற்கைநெறியை கல்முனைப்பிராந்தியத்தில் றோட்டரிக்கழகம் முன்னெடுப்பது இதுவே முதற்றடவையாகும் என தலைவர் எஸ்.சசிகுமார் தெரிவித்தார்.