16 கோடி 51 இலட்சம் ரூபா நிதியில் 11 வைத்தியசாலைகளின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு - நஸீர்

பைஷல் இஸ்மாயில் -

ம்பாறை மாவட்டத்திலுள்ள 11 வைத்தியசாலைகளின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் 16 கோடி 51 இலட்சம் ரூபா நிதியில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (16) மற்றும் புதன்கிழமை (17) ஆகிய திகதிகளில் இந்த வைத்தியசாலைகளின் ஆரம்ப அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், அமைச்சருமான றஊப் ஹக்கீமினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை, சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை, சமூகசேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் இன்று (14) தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் 3 மாடி சத்திர சிகிச்சைக் கூட கட்டிட நிர்மானப் பணியை ஆரம்பித்து வைப்பதற்காக 4 கோடி ரூபாவும், பொத்துவில் ஆதார வைத்தியசாலை அவசர சத்திர சிகிச்சைக் கூடம், பற் சிகிச்சைக் கூடம், வைத்தியசாலை வைத்தியர்களின் விடுதி திருத்தவேலைகளுக்காக  3 கோடி 30 இலட்சம் ரூபாவும், திருக்கோவில் ஆதார வைத்தியசாலை கட்டிட திருத்த வேலைகளுக்காக  1 கோடி 30 இலட்சம் ரூபாவும், அவசர சிகிச்சைப் பிரிவுக்காக  70 இலட்சம் ரூபாவும், பாலமுனை மாவட்ட வைத்தியசாலை பற்சிகிச்சைக் கூட கட்டிடம், ஆண்கள் விடுதி திருத்த வேலை மற்றும் மருந்தக களஞ்சிய திருத்த வேலைகளுக்காக 1கோடி 30 இலட்சம் ரூபாவும், பொத்துவில் பிரதேச உல்லை ஆரம்ப வைத்திய நிலையம் முடிவுருத்தல் மற்றும் சுற்று மதிலுக்காக  1 கோடி 40 இலட்சம் ரூபாவும், ஒலுவில் மாவட்ட வைத்தியசாலை ஆண்கள் விடுதியை முடிவுத்தல் செய்வதற்காக  1 கோடி ரூபாவும், இறக்காமம் பிரதேச வைத்தியசாலையின் தாதியர் விடுதிக்காக 70 இலட்சமும், உட்கட்டமைப்பு வசதி வேலைகளுக்காக 30 இலட்சம் ரூபாவும்,  அட்டாளைச்சேனை ஆலங்குளம் பிரதேசத்திலுள்ள ஆரம்ப சுகாதார வைத்திய நிலையம் அமைப்பதற்காக 70 இலட்சம் ரூபாவும், கல்முனை பாண்டிருப்பு ஆயுர்வேத வைத்தியசாலை கட்டிட நிர்மாணப் பணிக்காக 53 இலட்சம் ரூபாவும், பொத்துவில் ஆயுர்வேத வைத்தியசாலை நிர்மானப் பணிக்காக 53 இலட்சம் ரூபாவும்,அட்டாளைச்சேனை தள ஆயர்வேத வைத்தியசாலை வைத்தியர்களின் விடுதிக்காக 75 இலட்சம் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவுள்ளது. 

மேலும், குறித்த 11 வைத்தியசாவைகளின் ஆரம்ப வேலைகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றஊப் ஹக்கீமினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. 

இதில் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் மஹிபால, சுகாதார அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண பணிப்பாளர்கள், முன்னாள் பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட அரச உயரதிகாரிகள் என பலர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் மேலும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -