ஜேர்மனியிலிருந்து கொழும்பு நோக்கி வரவிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் 15 மணித்தியாலங்கள் தாமதமாக காரணமாகவிருந்த விமானி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த விமானி மது போதைப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதன் பின்னர், வேறு விமானியொருவரின் உதவியுடன் விமானம் பயணிக்க நேர்ந்துள்ளது.
கெப்டன் உபேந்திர ரணவீர என்பவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விமான பயணிகளின் பாதுகாப்புக்கே முதலிடம் வழங்குவதாகவும், இது போன்ற பொறுப்பற்ற முறையில் மதுப் பாவனையில் ஈடுபடுபவர்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த விமானம் தாமதமடைந்ததனால், தாமதக் கட்டணம் உட்பட பயணிகளுக்கும் பாரியளவு தொகை செலவிட வேண்டி ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தையும் விமான சேவை நிறுவனமே ஏற்கவேண்டி ஏற்பட்டதாகவும் ஸ்ரீ லங்கன் விமான சேவை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.