வயோதிபரை மோதிய இளைஞனுக்கு விளக்கமறியல்- வயோதிபர் பலி

அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை- கோபாலபுரம் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்ற வயோதிபரை மோதிய மோட்டார் சைக்கிள் சாரதியை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம்.ஏ.முஹீத் இன்று (09) உத்தரவிட்டார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் நிலாவௌி கோபாலபுரம் பகுதியைச்சேர்ந்த தர்மலிங்கம் ராஜா (23 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது- நிலாவௌி -கோபாலபுரம் பகுதியில் துவிச்சக்கர வண்டியுடன் பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதினால் துவிச்சக்கர வண்டியில் சென்ற அதே இடத்தைச்சேர்ந்த நடராஜா தங்கவேல் (63வயது ) அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தினுடன் தொடர்புடைய இளைஞரை இன்று திருகோணமலை நீதிிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்து.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சட்ட வைத்திய பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் உப்படைக்கப்படவுள்ளது.

விபத்து தொடர்பில் குச்சவௌி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -