திருகோணமலை- கோபாலபுரம் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்ற வயோதிபரை மோதிய மோட்டார் சைக்கிள் சாரதியை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம்.ஏ.முஹீத் இன்று (09) உத்தரவிட்டார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் நிலாவௌி கோபாலபுரம் பகுதியைச்சேர்ந்த தர்மலிங்கம் ராஜா (23 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது- நிலாவௌி -கோபாலபுரம் பகுதியில் துவிச்சக்கர வண்டியுடன் பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதினால் துவிச்சக்கர வண்டியில் சென்ற அதே இடத்தைச்சேர்ந்த நடராஜா தங்கவேல் (63வயது ) அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தினுடன் தொடர்புடைய இளைஞரை இன்று திருகோணமலை நீதிிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்து.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சட்ட வைத்திய பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் உப்படைக்கப்படவுள்ளது.
விபத்து தொடர்பில் குச்சவௌி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.