உலமா சபை மூலம் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு சம்பழம் என்கிறது - பொதுபல சேனா

சட்டவிரோதமாக விநியோகிக்கப்பட்ட ஹலால் சான்றிதழ் மூலம் பெறப்பட்ட பணம் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பின் மூலம் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அந்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து பணியாற்றிய நிலையில் சிரியாவில் கொலை செய்யப்பட்ட, இலங்கையின் முதலாவது ஐ.எஸ் தீவிரவாதியாக கூறப்படும் “அபூ சைலானி” என்று அழைக்கப்பட்ட நிலாம் மூசின் உலமா சபையுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிவந்ததாகவும், உலமா சபை மூலம் அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டதற்கான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்த அவர் இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 
DC 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -