ஆசுகவி அன்புடீன் எழுதிய ‘தொப்புள் கொடியும் தலைப்பாகையும்’ கவிதை நூல் அறிமுக விழா


இம்போட் மிரர் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அட்டாளைச்சேனை கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன் எழுதிய ‘தொப்புள் கொடியும் தலைப்பாகையும்’ கவிதை நூல் அறிமுக விழா எதிர்வரும் 06(சனிக்கிழமை) மாலை 04 மணிக்கு அல்ஹாஜ் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா தலைமையில் இடம்பெறும் என ஆசுகவி அன்புடீன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

இம்போட் மிரர் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர் அவர்களுடன் கெளரவ அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும் , தற்போதைய உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, நடுநாயக அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.அஸீஸ் அவர்களுடன் அரசியல் பிரமுகர்கள், இலக்கியவாதிகள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவித்தார். 

மேலும், இந்நிகழ்வின் போது இம்போட் மிரரின்  ஆரம்பகால உறுப்பினர்களை கெளரவிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -