மனைவி வெளிநாட்டில் - 65 வயதுடைய மாமியாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற மருமகன்

மாமியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற மருமகன் கீழ் உதட்டின் ஒருபகுதியை இழந்தவாறு கிரிந்திவெலப் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 65 வயதுடைய மாமியாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 44 வயதுடைய குடும்பஸ்தரே கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டின் பின் கதவினூடாக உட்பிரவேசித்த மருமகன் தனியாக இருந்த மாமியாரை பாலியல் துஷ்பிரியோகம் செய்ய முயன்றவேளையில் அவரிடமிருந்து தன்னைப் காப்பாற்றி கொள்வதற்காக, மருமகனின் கீழ் உதட்டின் ஒரு பகுதியை கடித்து துண்டாக்கி அவரிடமிருந்து தப்பி தனது கடைசி மகளின் வீட்டுக்குப் பாதுகாப்புக்காகச் சென்ற மாமியார், கிரிந்திவெலப் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாடு செய்துள்ளார்.

தனது மனைவி வெளிநாட்டில் தொழில் புரிந்து வரும் நிலையில், தனது மகளைப் பாதுகாப்பிற்காக மாமியாரின் வீட்டில் தங்க வைத்துள்ள குறித்த நபர், மகள் பிரத்தியோக வகுப்புகளுக்காகச் சென்றிருந்த வேளையிலே, வீட்டில் தனிமையில் இருந்த மாமியாரை இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார்.

கைது செய்யும் போது சந்தேகநபரின் கீழ் உதட்டின் ஒரு பகுதியைக் காணவில்லையென்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிரிந்திவெலப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -