இளைஞன் விபத்து - வீடியோ காட்சிகளில் அமைச்சர் சம்பிக்க இருந்தமைக்கான சாட்சி இல்லை

ராஜகிரிய பகுதியில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் அமைச்சுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படும் வாகனமொன்றில் மோதி இளைஞர் ஒருவர் பதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அமைச்சர் சம்பவ இடத்தில் இருந்தமை குறித்த சாட்சிகள் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மொரட்டுவை பல்கலைககழகத்துக்கு அனுப்பிய வீடியோ காட்சிகளில் அமைச்சரோ அல்லது அமைச்சரின் உருவத்தை ஒத்த ஒருவரோ காணப்படவில்லை என பொலிஸார் நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தீப சம்பத் இடமிருந்து வாக்குமூலமொன்றை பொலிஸார் பெற்றுகொள்ளவுள்ளனர்.

தற்பொழுது விசாரணைகளுக்காக குறித்த வாகனத்தை ஒட்டி சென்றவர் என தெரிவிக்கப்படும் துசித குமார என்பவரை சதேகனபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு எதிர்வரும் ஜூலை 29 ஆம் திகதி மீண்டும் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -