அமைச்சர் ஹக்கீம் தலைமையில் SLMCயின் அனர்த்த நிவாரண நடவடிக்கை...!

ஷபீக் ஹூசைன்- 

மைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும், கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர்களும், கொழும்பு மாவட்ட கட்சித் தொண்டர்களும் இன்று வெள்ளிக்கிழமை (20) களனி கங்கையின் இரு மருங்கிலும் அமைந்துள்ள வெள்ளப் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களுக்குச் சென்று நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர். 

வெல்லம்பிட்;டி, கொலன்னாவை, கொடிகாவத்தை, கொஹிலவத்தை என்பன உட்பட வெள்ளப் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களுக்கு அவர்கள் செல்லவுள்ளனர். 

அத்துடன், மல்வானை உட்பட கம்பஹா மாவட்டத்தில் மழையினாலும், வெள்ளத்தினாலும் அதிகமாக பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கும் சென்று அமைச்சர் ஹக்கீமும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர். 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பு மாவட்ட தொண்டர்கள் அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீனின் வழிகாட்டலில் கட்சியின் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் உலர் உணவுப் பொருட்களை சேகரித்து வருகின்றனர். 

வெல்லம்பிட்டி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வெள்ளம் காரணமாக மிகவும் கடுமையாக பாதிப்படைந்துள்ள பிரதேசங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கு அமைய மேல் மாகாணசபை உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீன் தலைமையிலான கட்சியின் அனர்த்த நிவாரண குழு மீட்புப் பணிகளிலும், நிவாரண நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருகின்றது. 

அத்தோடு அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கு அமைவாக நாளை வெள்ளிக்கிழமை (20) நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஊழியர்களும் மழையினாலும், வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபடவுள்ளனர். அமைச்சர் ஹக்கீமும் பிரஸ்தாப நிவாரண நடவடிக்கையில் கலந்துகொள்வார். 

கடுகண்ணாவை, இலுக்வத்தை, ரம்மலக கிராமத்தில் ஏற்பட்டமண்சரிவில் உயிரிழந்தவர்களின் உறவினர்களைசந்திப்பதற்கும், சேதங்களை பார்வையிட்டு உரிய நடவடிக்கை துரிதப்படுத்துவதற்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சனிக்கிழமை அங்கு செல்ல உள்ளார். 

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -